ஹீரோவை விட மாஸ் காட்டிய 3 வில்லன்கள்;
பொதுவாகவே ஒரு படத்தில் ஹீரோவின் கதாபாத்திரம் தான் நம் மனதில் ஆழமாக நிற்கும். சிறு வயதில், ஹீரோவை போல் உடை அணிவதும், அவரை போல் நடப்பதும், வசனம் பேசியும், நாட்களை கழித்திருப்போம்.
ஆனால், ஒரு படத்தில் வில்லனை கொண்டாடுவது குறைவான ஒரு செயல் தான். அப்படி வில்லனை கொண்டாட வேண்டுமென்றால் அவரின் கதாபாத்திரம் மிரட்டலாகவும் மாஸாகவும் இருக்க வேண்டும்.
அந்த வகையில் மக்கள் கொண்டாடிய மூன்று வில்லன்களை தான் நாம் பார்க்க போகிறோம்.
மூன்றாம் இடத்தில் இருப்பது, 24 படத்தில் வரும் ஆத்ரேயா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா தான். 24 படத்தில் 3 வேடங்களில் சூர்யா நடித்திருந்தாலும். அப்படத்தில் பெரும் அளவில் கொண்டாட பட்ட கதாபாத்திரம் ஆத்ரேயா தான். அந்த அளவிற்கு மிரட்டலாக இருந்திருப்பார் சூர்யா.
இரண்டாம் இடத்தில் இருப்பது, “தனி ஒருவன்” படத்தில் நடித்திருக்கும் அரவிந்த் சாமி தான். அவரின் கதாபாத்திரம் ஒரு சைலன்ட் கில்லர் கதாபாத்திரமாக இருந்தாலும் ஆடியன்ஸ் என்னவோ பெரும் கூச்சலோடு தான் வரவேற்றனர்.
முதல் இடத்தில் இருப்பது அனைவர்க்கும் தெரிந்த “ரோலெக்ஸ்” கதாபாத்திரம் தான். பெயரை சொன்னதுமே அவரின் என்ட்ரி தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு மாஸான கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் சூர்யா.
மூன்று இடங்களில் இரண்டு இடத்தை தன்வசம் வைத்திருப்பது என்னவோ சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.