3 நாட்களில் திருமணம்; விபத்தில் சிக்கிய சர்வானந்த்!

 3 நாட்களில் திருமணம்; விபத்தில் சிக்கிய சர்வானந்த்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சர்வானந்த். இவர் தமிழில் எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மனம் கவர்ந்தவர்.

அடுத்தப்படியாக சில மாதங்களுக்கு முன் வெளியான கணம் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் சர்வானந்துக்கும் அவரது காதலியான ரக்‌ஷிதா ரெட்டியுடனும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வரும் ஜூன் 3-ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் இரு தினங்களுக்குஜ் முன் காலை நடிகர் சர்வானந்த், கார் விபத்தில் சிக்கியுள்ளார். ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது சர்வானந்தின் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விட்டதாம்.

இதில் காருக்குள் இருந்த சர்வானந்துக்கு காயம் ஏற்பட்டுச்சாம். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து சர்வானந்த் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

இன்னும் 3 நாட்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related post