கிளி வளர்த்த விவகாரம் .. ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம்

 கிளி வளர்த்த விவகாரம் .. ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ரோபோ சங்கர்.

இவர் தனது குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் ரோபோ சங்கள் தனது வீட்டில் கிளி வளர்ப்பதாக கூறி வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் அதிரடியாக அவரது வீட்டில் இருந்து இரண்டு கிளிகளை பறிமுதல் செய்து சென்றனர்.

இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். அதோடு அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரோபோ சங்கர் தரப்பிடம் விசாரித்த போது, வனத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளிக்கவில்லை. கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் அடுத்த வாரம் அதிகாரிகளை சந்தித்தபின்பு தன்னிலை விளக்கம் அளிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

 

Related post