அண்ணாமலை படத்தின் பிரபலம் சரத்பாபு காலமானார்!

 அண்ணாமலை படத்தின் பிரபலம் சரத்பாபு காலமானார்!

ரஜினியின் முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை உட்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் சரத்பாபு.

தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்திருந்தார்.

71 வயதான சரத்பாபுவிற்கு கல்லீரல் மற்றும் நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த சரத்பாபு, நேற்று மாலை உயிரிழந்தார்.

இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது அவரது உடல்.

 

Related post