தேசிய விருது அங்கீகாரம் நல்ல திரைப்படங்களில் நடிக்க ஊக்கமளிக்கிறது – நடிகர் சூர்யா!

 தேசிய விருது அங்கீகாரம் நல்ல திரைப்படங்களில் நடிக்க ஊக்கமளிக்கிறது – நடிகர் சூர்யா!

சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருக்கும் நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,

அதில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வை சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய்க்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னத்திற்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கு இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்”.

என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என் ஏற்றத்-தாழ்வுகளில் எப்போதும் என் உடன் இருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைண்டஹ் அன்பும் நன்றியும்.. இந்த தேசிய விருது அங்கீகாரம் நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வு குழுவினருக்கும் இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related post