சூர்யாவை இயக்கும் ப்ரித்விராஜ்.!?

 சூர்யாவை இயக்கும் ப்ரித்விராஜ்.!?

சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் முடிந்துவிட்ட நிலையில், சென்னையில் உள்ள ஒரு அரங்கில் பிரம்மாண்ட செட் அமைத்து அதில் சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தினைப் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி, சூர்யாவின் 43வது படத்தினை இயக்குனரும் நடிகருமான ப்ரித்விராஜ் இயக்கவிருக்கிறாராம். பிரபல பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் ராஜன் பிள்ளையின் வாழ்க்கை வரலாறைத்தான் ப்ரித்விராஜ் இயக்கவிருக்கிறாராம்.

அதில்தான் சூர்யா நடிக்கவிருக்கிறாராம். மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ராஜன் பிள்ளை சிறையில் மர்மமான முறையில் இறந்தது பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியிருந்தது..

சூர்யா நடிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாமும் காத்திருப்போம்.

 

Related post