234 தொகுதிகளிலும் களம் இறங்கும் விஜய்!

 234 தொகுதிகளிலும் களம் இறங்கும் விஜய்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய், தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக வலம் வந்தாலும், தனது மன்றத்தின் நடவடிக்கைகளிலும் அவ்வப்போது அக்கறை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய் விரைவில், அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து செய்து வருகிறது.

அதில் முதல் கட்டமாக பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களை அவர் சந்தித்து நிதி உதவி வழங்க உள்ளார்.

அது மட்டும் இல்லாமல் ஒரு தொகுதியில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று பிளஸ் டூ மாணவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் என மக்கள் மன்றத்தினர் தேர்வு செய்கின்றனர். அவர்களுடன் தாய் தந்தை இழந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் விஜய் சந்தித்து நிதி உதவி வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Related post