மேடையிலேயே நடிகை மீது “கை” வைத்த மாணவர்… அடுத்து நடந்த அதிர்ச்சி!

 மேடையிலேயே நடிகை மீது “கை” வைத்த மாணவர்… அடுத்து நடந்த அதிர்ச்சி!

எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அபர்ணா பால முரளி. இந்த படத்திற்குப் பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த சூழரைப்போற்று படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் இந்த அபர்ணா பாலமுரளி.

தற்போது மலையாள படங்களிலும் பிசியாக இருந்து வரும் ஆபரண பால முரளி, அங்கு வினித் ஸ்ரீனிவாசன் உடன் தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ப்ரொமோஷன் பணிக்காக, அங்குள்ள சட்டக்கல்லூரி ஒன்றிற்கு சென்றிருந்தார் அபர்ணா. அப்போது நிகழ்ச்சியின் மேடையில் அமர்ந்திருந்த அபர்ணா பாலமுரளியிடம் மேடையின் முன்பிருந்த மாணவர் ஒருவர் வேகமாக மேடையில் ஏறி அவரின் அருகில் சென்று அவர் தோளில் கை போட்டார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணா விலகி சென்றார். இருப்பினும் அந்த மாணவர் அபர்ணாவின் கையைப் பிடித்து இழுத்து போட்டோ எடுக்க முயற்சி செய்தார். இந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அதன்பின் தவறாக நடக்க முயன்ற மாணவரை அனைவரும் கண்டித்தனர். அந்த மாணவர், அபர்ணாவிடம் மன்னிப்பு கேட்டார்.

மேடையில் நடந்த காட்சி வீடியோ இணையத்தில் பெரும் வைரலானதைத் தொடர்ந்து பலரும் தங்களது கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர் இந்த நிலையில் நடிகையிடம் தவறாக நடக்க முயற்சித்த மாணவரை சட்டக் கல்லூரி பணியாளர் கவுன்சில் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது..

 

Related post