பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சமந்தா

 பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சமந்தா

தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை சமந்தா.

இவர் சமீபத்தில் அரிய வகை நோயான மயோசிடிஸ் நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிலிருந்து விரைவில் குணமடைவேன் என்றும் கடந்த அக்டோபர் மாதம் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனால், ரசிகர்கள் மிகுந்த வேதனை தெரிவித்தனர். இவர் தற்போது குஷி மற்றும் சகுந்தலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நோயில் இருந்து மீள சிறிது காலம் எடுத்துக் கொள்ளும் என்கிறார்கள்.

இந்நிலையில், பழனி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று சமந்தா வந்துள்ளார்.

பழனி மலைக்குச் செல்லும் படிக்கட்டுகளில் வரிசையாக கற்பூரத்தை ஏற்றி பிரார்த்தனை செய்துள்ளார். ராஜ அலங்காரத்தில் இருந்த பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்துள்ளார் சமந்தா.

 

Related post