யாஷிகா மீது பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்!
கடந்த 2021 ஆம் வருடம் ஜூலை 24ஆம் தேதி அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற காரானது மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். வந்தாய்ங்க
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு உடல்நலம் தேறினார்.
செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் வழக்கு தொடர்பான விசாரணைக்கு யாஷிகா ஆஜராகவில்லை.
இந்த நிலையில் வரும் 2023 மார்ச் 25 ஆம் தேதிக்கு ஆஜராக வேண்டுமென்று கூறி நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. அப்படி ஒருவேளை அவர் ஆஜராகவில்லை என்றால் அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.