ஆர்யா பிறந்தநாளுக்கு சாயிஷா கொடுத்த கிப்ட்

நடிகர் ஆர்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை ஆர்யாவிற்கு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தன்னுடைய கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சாயிஷா.

தனது ட்விட்டர் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே..! நீங்கள் ஒரு சிறந்த கணவர், தந்தை மற்றும் சிறந்த மனிதர். என்றும் நீங்கள் என் வாழ்வில் உள்ளதை பெரும் பாக்கியமாக நாங்கள் கருதுகிறோம். என்னுடையதாக இருப்பதற்கு நன்றி. நான் என்றென்றும் உங்களை நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், ஆர்யா, சாயிஷா மற்றும் அவர்களது குழந்தையான ஆரியானா மூவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சாயிஷா.

முதல்முறையாக தங்களது குழந்தையின் முகத்தை வெளிஉலகுக்கு காண்பித்துள்ளனர் இருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post