ருத்ரன் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

 ருத்ரன் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ருத்ரன்.

வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், ருத்ரன் படத்தினை வெளியிட இடைக்கால தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ருத்ரன் படத்தின் ஹிந்தி உள்ளிட்ட வடமொழி டப்பிங் உரிமையைப் பெற்ற ரெவன்சா என்ற நிறுவனம் 12.25 கோடிக்கு படத்தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாகவும் இதற்காக முன்பனமாக 10 கோடி செலுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

10 கோடி ரூபாய் முன்பணம் செலுத்திய நிலையில் மேலும் 4.5 கோடி கேட்டு தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெவன்சா நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

 

Related post