எம் எஸ் தோனியை தொடர்ந்து படத்தயாரிப்பில் இறங்கிய ஜடேஜா

 எம் எஸ் தோனியை தொடர்ந்து படத்தயாரிப்பில் இறங்கிய ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர ஆட்டக்காரருமான எம் எஸ் தோனி சில மாதங்களுக்கு முன் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.

தமிழ் படத்தை தனது முதல் தயாரிப்பாகவும் அறிவித்தார். இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்.

படத்திற்கு எல் ஜி எம் என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது., இந்நிலைஇல் பிரபல ஆல் ரவுண்டராக வலம் வரும் ரவீந்திர ஜடேஜாவும் படத்தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.

‘பச்சாதர் கா ஜோரா’ (Pachhattar Ka Chhora) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜெயந்த் கில்டார் இயக்குகிறார். ரன்தீப் ஹூடா, நீனா குப்தா, சஞ்சய் மிஸ்ரா, குல்சன் குரோவர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

கடந்த மாதம் தான், ஜடேஜாவின் மனைவி எம் எல் ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post