திருநெல்வேலியில் வீடு எடுத்து தங்கியிருக்கும் துருவ் விக்ரம்!

 திருநெல்வேலியில் வீடு எடுத்து தங்கியிருக்கும் துருவ் விக்ரம்!

மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதற்கு நடுவே,வாழை என்ற படத்தையும் தயாரித்து இயக்கி முடித்துவிட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் துருவ் விக்ரம்.

லண்டனில் ஓய்வில் இருந்த துருவ் விக்ரமை அவசரமாக அழைத்து, கதையை கூறியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

கதை பிடித்து போக உடனே ஓகே சொல்லியிருக்கிறார் துருவ். இந்த படத்தின் துருவ், கபாடி விளையாட்டு வீரராக நடிக்கவிருக்கிறார்.

அதற்காக திருநெல்வேலியில் சக விளையாட்டு வீரர்களோடு வீடு எடுத்து தங்கி ட்ரெய்னிங் எடுக்க வேண்டும் என்று மாரி செல்வராஜ் சொல்ல, எதுவும் கூறாமல் உடனே திருநெல்வேலி பறந்துவிட்டாராம் துருவ்.

இப்போது, திருநெல்வேலியில் தங்கி அங்கு பயிற்சி எடுத்து வருகிறாராம் துருவ் விக்ரம். விரைவில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.,

Related post