ரோகினி திரையரங்கில் கெத்து காட்டிய தளபதி ரசிகர்கள்!

 ரோகினி திரையரங்கில் கெத்து காட்டிய தளபதி ரசிகர்கள்!

தளபதி விஜய் நடிக்க உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 5 மணியளவில் யூ டியூப் தளத்தில் வெளியானது.

படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் கொண்டாட்டத்தைக் கொண்டாட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை கோயம்பேடு அருகேயுள்ள ரோகினி திரையரங்கிற்கு படையெடுத்தனர்.

இதனால், அப்பகுதி முழுக்க மனித தலைகளாக தென்பட்டன. சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

ட்ரெய்லர் வெளியானதை மிகவும் ஆரவாரமாக கொண்டாடி மகிழ்ந்தனர் தளபதி ரசிகர்கள்.வானவேடிக்கையும் செய்து வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் ஆடிப்பாடி மீண்டும் ரோகினி திரையரங்கு தளபதி கோட்டை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

 

Related post