நிறுத்தப்பட்டதா சூர்யாவின் “வாடிவாசல்”? ; தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!

 நிறுத்தப்பட்டதா சூர்யாவின் “வாடிவாசல்”? ; தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!

சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வந்த வணங்கான் திரைப்படத்தில் சூர்யா விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சூர்யா இயக்குனர் வெற்றிமாறனோடு உருவாக இருக்கும் வாடிவாசல் என்ற படத்தில் இருந்தும் விலகுவதாக தகவல் காட்டுத்தீயாக பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, “இது ஆதாரமற்ற வதந்திகள் எனவும் மக்கள் தங்கள் 10 நிமிட புகழுக்காக இது போன்ற வதந்திகளை பரப்புவதாகவும் யாரும் இதனை நம்ப வேண்டாம் எனவும் தற்போது படத்தின் ப்ரீ ப்ரொடெக்ஷன் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related post