பணபெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறுவது யார்? அமுதவாணனுக்கு இது தேவையா?

 பணபெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறுவது யார்? அமுதவாணனுக்கு இது தேவையா?

இன்னும் ஒரு சில தினத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என தெரிந்துவிடும். இதனால் முன்பை விட பிக் பாஸ் ரசிகர்கள் விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீசன் 6 நிகழ்ச்சியை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் நேற்று நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத நேரத்தில் கதிரவன் பணம் மூட்டையை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் முதல் முதலாக இரண்டு முறை பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. 3 லட்சத்தில் துவங்கப்பட்ட பணப்பெட்டியின் வேல்யூ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இறுதிச்சுற்றில் இருக்கும் அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன், சிவின் உள்ளிட்டோருக்கு பிக் பாஸ் பணத்தாசையை காட்டிக் கொண்டிருக்கிறார்.

வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் மைனா தான் அந்த பெட்டியை தூக்குவார் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை ஜெயிச்சு முதல் ஆளாக இறுதிச்சுற்றுக்கு தகுதியான அமுதவாணன் பணப்பெட்டியை எடுக்க போகிறார்.

ஏனென்றால் அவர் பணப்பெட்டியை எடுக்கும் போது 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை பணப்பெட்டியின் வேல்யூ உயர்த்தப்படும். எப்படியும் அசீன் மற்றும் விக்ரமன் இருவரில் ஒருவர்தான் வெற்றியாளராக ஆகப் போகிறார்கள். இதனால் கடைசி நிமிடத்தில் எலிமினேட் ஆவதை விட சம்பளத்துடன் இந்த பணப்பெட்டியும் சேர்த்து எடுத்துச் சென்றால் நல்லது தானே! என்றும் அமுதவாணனுக்கு தோன்றி இருக்கிறது.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் அமுதவாணன், வாய்ப்பு கிடைக்காமல் காமெடி நடிகராக பல மேடைகளில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறார். ஆகையால் அவருக்கு இந்த 8 லட்சம் என்பது மிகப்பெரிய தொகையாக தெரிகிறது.

நேற்று கதிரவன் பண மூட்டையுடன் சென்றது போல் இன்றைய நிகழ்ச்சியில் அமுதவாணன் 8 லட்ச பணப்பெட்டியுடன் வெளியேறுகிறார். மீதம் இருக்கும் மைனா, சிவின், விக்ரமன், அசீம் உள்ளிட்ட நான்கு பேர் தான் இறுதிச்சுற்றுக்கு செல்கின்றனர். இவர்களுள் விக்ரமன், அசீம் இருவரும் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆகி 50 லட்சத்தை தட்டித் போகின்றனர்.

 

Related post