“நீங்க பார்த்தது பார்ட் 2 தான்… 1 பார்ட் இனிதான் எடுக்கப் போறேன்” – காந்தாரா இயக்குனர்!

 “நீங்க பார்த்தது பார்ட் 2 தான்… 1 பார்ட் இனிதான் எடுக்கப் போறேன்” – காந்தாரா இயக்குனர்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் தான் “காந்தாரா”. இப்படம் கன்னட மொழியில் எடுக்கப்பட்டு, அதன்பின் இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது.

இப்படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. கே ஜி எஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து கன்னட சினிமாவில் மீண்டும் ஒரு மைல்கல்லாக அமைந்தது இந்த காந்தாரா.

இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி, “ சென்ற வருடம் வெளியான காந்தாரா திரைப்படம் இரண்டாம் பாகம் தான். இத்திரைப்படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும். இந்தப் பகுதி பல வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த தெய்வத்தின் பின்னணி குறித்து கூறும் கதைகளமாக அமையும். கதைக்கான பணிகள் தற்போது நடந்து வருவதால் விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும்.” என்று கூறினார்.

 

Related post