ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட காந்தாரா!

 ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட காந்தாரா!

இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் “காந்தாரா”. இப்படத்தை கே ஜி எஃப் படத்தைத் தயாரித்த ஹோம்பேல் ப்ரொடக்‌ஷன் தயாரித்திருந்தது.

படம் வெளியாகி மிகப்பெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. சுமார் 400 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது காந்தாரா.

இந்நிலையில், எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் நாட்டுக்குத்து பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காந்தாரா படத்தினை ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடைசி நேரத்தில் விண்ணப்பத்தை அனுப்பியிருந்தாலும் காந்தாரா நிச்சயம் விருதை வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக காந்தாரா படத்தினைத் தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் விஜய் கிர்கந்தூர் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

 

Related post