130 பேருக்கு தங்கக்காசு… கீர்த்தி சுரேஷின் பறந்த மனசு!!
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தினை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் மிகப் பெரும் பொருட்செலவில் நானி ஹீரோவாக நடித்து உருவாகி வரும் தசரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதன் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. அப்போது அங்கு பணியாற்றிய சுமார் 130 பேருக்கு தலா இரண்டு கிராம் தங்க காசுகளை பரிசளித்திருக்கிறார் கீர்த்தி. இந்த செய்தியறிந்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்..