வீரமே ஜெயம்; மாவீரன் டப்பிங்க் பணியை துவக்கிய சிவகார்த்திகேயன்!
மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை துவக்கியுள்ளது படக்குழு. நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கான டப்பிங் பணியை துவக்கியுள்ளார்.
வீரமே ஜெயம் என்று பேசி தனது டப்பிங் பணியை துவக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், ஜூன் மாதம் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவையும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.