பாதியில் நிறுத்தப்பட்ட மாவீரன் படப்பிடிப்பு… ரசிகர்கள் அப்செட்!

 பாதியில் நிறுத்தப்பட்ட மாவீரன் படப்பிடிப்பு… ரசிகர்கள் அப்செட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி தின வெளியீடாக வந்த திரைப்படம் தான் பிரின்ஸ். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சுமார் 45 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தனது அடுத்த படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்றெண்ணிய சிவகார்த்திகேயன், மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் கடுமையான உழைப்பை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே வாய்ப்போர் ஏற்பட்டு படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு விட்டதாம்.

சமாதான பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Related post