மார்கழியில் மக்களிசை மேடையில் பாடிய சித் ஸ்ரீராம்.

 மார்கழியில் மக்களிசை மேடையில் பாடிய சித் ஸ்ரீராம்.

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை ஆறாவது நாளாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கோலாகலத் திருவிழாவாக “Hip Hop & Rap” என பெயரிடப்பட்டு நடந்தது..

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் அவர்கள் “இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது மிக பெருமையாக இருக்கிறது” நான் வெகுவாக ரசித்தேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேடையில் பாடினார் சித் ஸ்ரீராம்.

கவிஞர் தனிக்கொடி “மார்கழியில் மக்களிசை பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றும் நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய ஓவியர் அனிதா ரஞ்சித் “இசைக்கலைஞர்கள் மார்கழியில் மக்களிசை மேடையில் சிறப்பாக பாடினார்கள்” என்று மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார்.

நடிகை ரித்விக்கா மார்கழியில் மக்களிசையில் கலந்துக்கொண்ட அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் மக்களிசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க ப்பட்டது.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து 30/12/2021 இதே தமிழ் இசை சங்கத்தில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெறும்.

அனைவரும் வாரீர் அன்போடு அழைக்கிறோம்!

Related post