ஒரு வழியாக நிறைவடைந்த “பத்து தல” படப்பிடிப்பு!!

 ஒரு வழியாக நிறைவடைந்த “பத்து தல” படப்பிடிப்பு!!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் பத்து தல.

படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாளில் இருந்து பல முறை படத்தின் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் இருந்துகொண்டே வந்தது.

பலமுறை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது என்றெல்லாம் செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று சிம்புவின் ரசிகர்களும் பெருமூச்சு விடுகின்றனர்.

இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related post

You cannot copy content of this page