200 கோடி வசூலை வாரிக்குவித்த “பொன்னியின் செல்வன் பாகம் 2”

 200 கோடி வசூலை வாரிக்குவித்த “பொன்னியின் செல்வன் பாகம் 2”

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன் பாகம் 2”.

ஏற்கனவே பாகம் 1 மிகப்பெரும் வசூலை ஈட்டிய நிலையில், பாகம் 2-க்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

கலவையான சில விமர்சனங்கள் பெற்றிருந்தாலும், அரங்கு நிறைந்த காட்சிகளாத்தான் இத்திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

வெறும் 4 நாட்களில் மட்டும் இத்திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருக்கிறது. இதை தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

 

Related post