பொன்னியின் செல்வன் 2; முதல் நாள் வசூல் கொஞ்சம் கம்மிதான்!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் 2.
கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், நல்ல வசூலையும் வாரிக் குவித்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி நல்லதொரு விமர்சனத்தை பெற்று வருகிறது.
தமிழகத்தில் எந்தவித சிறப்புகாட்சியும் இல்லாமல், 8 மணி காட்சி தான் முதல் காட்சியாக திரையிடப்பட்டது.
இதனால், காட்சிகளின் எண்ணிக்கை திரையரங்குகளில் குறைந்து போனது. இதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் வசூல் சற்று இறங்கியுள்ளது..
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்த்து 35 கோடியும், வெளி நாடுகளில் சுமார் 30 முதல் 35 கோடி வரையிலும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாளில் மட்டும் 65 முதல் 70 கோடி வரை வசூலை ஈட்டியிருக்கலாம் என்கிறார்கள். இது முதல் பாகத்தை விட சற்று குறைவு தான் என்கிறார்கள். முழு வசூல் நிலவரம் ஓரிரு நாட்களில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.