பொன்னியின் செல்வன் 2… மணிரத்னம் போடும் ப்ளான்!

 பொன்னியின் செல்வன் 2… மணிரத்னம் போடும் ப்ளான்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.

மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், சுமார் 500 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது.

இந்நிலையில், இதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வைத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம், அதற்கான கிராபிக்ஸ் கோர்க்கும் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார்.

இருந்தாலும், படத்தின் ஒரு சில காட்சிகளை இன்னும் எடுக்க வேண்டி இருப்பதால் அதற்காக தாய்லாந்து செல்லலாமா.? அல்லது சென்னையிலேயே செட் போட்டு எடுத்துக் கொள்ளலாமா .? என தனது குழுவினரோடு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.

இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது அடுத்த படத்திற்கான வேலைகளிலும் கெட்-அப் களிலும் இருப்பதால் ”பொன்னியின் செல்வன் 2” பட ஷூட் எப்போது தொடங்கும் என கேள்வி எழுந்துள்ளது.

 

Related post