பிரம்மாண்டத்தின் உச்சம்; ”பொன்னியின் செல்வன்” ஆடியோ விழா எங்க நடக்கப் போகுதுன்னு தெரியுமா.?

 பிரம்மாண்டத்தின் உச்சம்; ”பொன்னியின் செல்வன்” ஆடியோ விழா எங்க நடக்கப் போகுதுன்னு தெரியுமா.?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் மிக பிரம்மாண்டமான படைப்பு தான் “பொன்னியின் செல்வன்”. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக இந்தியாவே காத்திருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் திரைக்கும் வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி வரும் ஜூலை முதல் வாரத்தில் ராஜராஜ சோழனின் தஞ்சாவூரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post