சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருதுடன் ரிஷப் ஷெட்டி!

 சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருதுடன் ரிஷப் ஷெட்டி!

கன்னடத்தில் வெளிவந்து மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் “காந்தாரா”. இப்படத்தினை இயக்கி நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி.

இப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டது.

இவ்விருதை பெற்றதும் ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா விருதைப் பெற்றதை நான் பெருமையாகவும், ஆசீர்வதிப்பதாகவும் உணர்கிறேன். தன்னை நம்பியதற்காக ஹோம்பலே பிலிம்ஸுக்கு நன்றி. காந்தாரா குழுவினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், மனைவி பிரகதி ஷெட்டி அனைவருக்கும் நன்றி.” என்று கூறியுள்ளார்.

 

Related post