சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி.. 2 வருட கால்ஷீட்!

 சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி.. 2 வருட கால்ஷீட்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நேர்த்தியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை சாய்பல்லவி.

தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கும் சாய் பல்லவி, கதைகளைக் கேட்க நேரம் ஒதுக்க முடியாமல், தன் இமெயில் முகவரிக்கு அனுப்பச் சொல்றார்.

அப்படி வரும் கதைகள் அனைத்தையும் படித்து, அந்தந்த இயக்குனர்களுக்கு பதிலுரையும் கொடுக்கிறார்.

சில கதைகளை அவர் செய்ய முடியாத நிலையிலும்கூட, எழுதியவர்களைத் தொடர்புகொண்டு பாராட்டி, படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சிபாரிசும் செய்து வருவதை வழக்கமாக கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் ராமாயணக்கதை படமாக்கப்படவிருக்கிறது. இப்படத்தில் சீதையாக நடிக்க சாய் பல்லவியை அணுகியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்..

இதில் நடிக்க ஓகே சொல்லிய சாய்பல்லவி, இதற்காக 2 வருடங்கள் கால்ஷீட்டை ஒதுக்கியிருக்கிறாராம்.

இதனால், வேறு படம் எதையும் கமிட் செய்யாமல் இருக்கிறாராம் சாய்பல்லவி.

 

Spread the love

Related post

You cannot copy content of this page