இன்று திறக்கப்படுகிறது “சமந்தா” கோவில்!

 இன்று திறக்கப்படுகிறது “சமந்தா” கோவில்!

ரசிகர்கள் ஆர்வம் மிகுதி கொண்டு, நடிகர், நடிகைகள் மீது தீராத காதல் கொண்டு இருப்பர். அந்த ஆர்வம் அளவுக்கு அதிகமாகும் போது சிலர் அவர்களுக்காக கோவிலையும் கட்டுவர்.

அந்த வரிசையில் இந்தியாவில் குஷ்பு, நயன்தாரா, ஹன்சிகா, நமீதா, ஹனிரோஸ் போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில் கட்டியுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது, ஆந்திராவின் குண்டூர் அருகே பாட்பலா மாவட்டம் அலைபாடு கிராமத்தில் வசித்து வரும் சந்தீப் என்பவர் சமந்தாவிற்கு கோவில் கட்டியுள்ளார்.

நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர்தான் இந்த சந்தீப். இவர் நடிகை சமந்தாவுக்காக கட்டி வரும் கோவிலை இன்று திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த பகுதியில் இருப்பவர்கள் இப்போதே ஆர்வமுடன் வந்து வந்து பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, நடிப்பு என்பதையும் தாண்டி சமந்தா பல தொண்டுகளை செய்து வருகிறார். அதன் காரணமாகத் தான் அவர் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமானது. இதனை முன்னிட்டு தான் அவருக்காக கோவில் கட்ட தீர்மானித்தேன். தற்போது கட்டியும் முடித்து விட்டேன்.’ என்று கூறுகிறார் சந்தீப்.

Related post