பொறாமையாய் உள்ளது … நொந்து போன செல்வராகவன்!

 பொறாமையாய் உள்ளது … நொந்து போன செல்வராகவன்!

இயக்குனர் செல்வராகவன் கடைசியாக தனுஷை வைத்து நானே வருவேன் படத்தினை இயக்கினார்.

தற்போது இயக்கத்தை விட நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். இவரது நடிப்பில் தற்போது பகாசூரன் படம் வெளிவந்தது.

இந்நிலையில், செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலையுடன் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்”. என்று தனது மன வேதனையை கூறியுள்ளார்.

 

Related post