மறைந்த தன் மகளுக்கு உருக்கமான வாழ்த்து கூறிய சின்னக்குயில் சித்ரா!

 மறைந்த தன் மகளுக்கு உருக்கமான வாழ்த்து கூறிய சின்னக்குயில் சித்ரா!

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமா உலகில் சின்னக்குயில் சித்ரா என்றால், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவரது குரலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் அடிமை என்று தான் கூற வேண்டும். ஆறு முறை தேசிய விருதுகளை குவித்த பின்னணி பாடகி என்ற பெருமையும் சின்னக்குயிலுக்கு உண்டு.

இவர் 1988 ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு நந்தனா என்று பெயரிட்டனர். 2011 ஆம் ஆண்டு நீச்சல் குளத்தில் நந்தனா தவறி விழுந்து உயிரிழந்தார்.

11 வருடங்கள் ஆன நிலையில், நேற்று நந்தனாவின் பிறந்தநாள் என்பதால் தனது உருக்கமான வாழ்த்தினை சித்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “நீ சொர்க்கத்தில் தேவதைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருப்பாய். வருடங்கள் கடந்தாலும் உனக்கு வயதாவதில்லை. நீ தூரமாக இருந்தபோதிலும் பாதுகாப்பாக இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஐ லவ், மிஸ் யூ. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே நந்தனா” என்று கூறியுள்ளார்.

 

Related post