சூர்யா மீண்டும் கையில் எடுக்கும் “அருவா”

 சூர்யா மீண்டும் கையில் எடுக்கும் “அருவா”

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் தான் “அருவா”. கடந்த 2020ஆம் ஆண்டு இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது.

அதன்பிறகு கொரோனா பெருந்தொற்றால் இந்த படம் நிறுத்தப்பட்டது. காலங்கள் கடக்க அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தார் சூர்யா.

இந்நிலையில், மீண்டும் இந்த படத்தை கையில் எடுத்திருக்கிறார் சூர்யா. அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இறங்கியிருக்கிறார் சூர்யா.

இபப்டத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

தென் தமிழகத்தையே மையமாக வைத்து படம் இயக்கி வரும் ஹரி, இப்படத்தையும் திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளிலே படமாக்கவிருக்கிறார்..

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளது.

 

Related post