1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வெளியான திரைப்படம் தான் “நாயகன்”. மிகப்பெரும் அளவில் இப்படம் வெற்றி பெற்றது. தற்போது சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கதில் நடிக்கவிருக்கிறார் கமல்ஹாசன். இவர்களோடு ஏ ஆர் ரகுமானும் கைகோர்த்திருக்கிறார். படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இணைந்து படத்திற்கான அறிவிப்பை விழாவாக கொடுத்திருக்கின்றனர். இப்படத்தினை கமல்ஹாசனே தயாரிக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கிய நிலையில், 2024 ஆம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் […]Read More
Tags : ar rahman
மிஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தினை இயக்கி முடித்து வைத்திருக்கிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தினை இயக்க திட்டம் போட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மிஷ்கின். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Read More
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தனது 26வது படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருண்டு வருகிறார் கார்த்தி. இப்படத்தினை நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஷுட்டிங்க் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி போலீஸாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் […]Read More
தனுஷ் இயக்கி நடிக்கும் படமான “” படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமாகியிருக்கிறது. இதற்காக சென்னை ஆதித்யராம் அரங்கில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன் மற்றும் தனுஷ் பங்குபெறும் காட்சிகள் அதில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். ஆக்ஷன் காட்சிகள் எடுத்து வருகிறார்களாம். ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறாராம். சுமார் 110 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். ஏ ஆர் ரகுமான் இரண்டு பாடல்களை முடித்து தனுஷிடம் கொடுத்துவிட்டாராம்.Read More
தனுஷின் நடிப்பில் உருவாகி வந்த “கேப்டன் மில்லர்” படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. இந்நிலையில், தனது அடுத்த படமான 50வது படத்தை தனுஷே இயக்கி நடிக்கவிருக்கிறார். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் நடிக்கவிருக்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியானது. இதில் தனுஷ், மேலாடை இல்லாமல் மொட்டைத் தலையுடன் […]Read More
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கேப்டம் மில்லர்” படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தனுஷின் 50 வது படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் நடிகர் தனுஷ். இப்படத்தினை இவரே இயக்கவும் இருக்கிறார். ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்கான பூஜை பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், […]Read More
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தினை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருத்திகாவின் கதை உதயநிதிக்கு பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் ஜெயம் ரவி. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.. அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாமன்னன் படத்தின் முதல் பாடலான ராசா கண்ணு பாடல் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. முதல் பாகம் வெளியாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில், இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் படத்தில் […]Read More
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் மிகப்பெரும் வசூல் வேட்டை நிகழ்த்தி நிலையில், அடுத்த பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இரண்டாம் பாகத்திற்கான இசைக்கோர்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. […]Read More