இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க மிகவும் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு படத்தினை திரைக்கு கொண்டு வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை […]Read More
Tags : dhanush
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் , பிரியங்கா மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் பொங்கல் தின விடுமுறையை முன்னிட்டு படத்தினை திரைக்குக் கொண்டு வர உள்ளது படக்குழு. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் அனைத்து ரசிகர்களிடையும் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாக ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் […]Read More
ஜெயிலர் படத்தினைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் “தலைவர் 170” படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அதேபோல், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கி வரும் படம் தான் “D50”. தனுஷின் 50வது படமான இது மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. “தலைவர் 170” ம்ற்றும் “D50” இந்த இரண்டு படங்களும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பிருப்பதாக […]Read More
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “வட சென்னை”. இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தினை கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதற்கு, சென்னை கமலா திரையரங்கில் இப்படம் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. டிக்கெட்டின் விலை சுமார் 48 ரூபாய் மட்டுமே என்று தள்ளுபடி விலையை அறிவித்தது கமலா திரையரங்கம். இதனால், […]Read More
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தனது 50வது படத்தில் நடித்து வருகிறது. தனுஷே இப்படத்தினை இயக்கவும் செய்கிறார். வட சென்னையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் எனவும் தெரிகிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான், அனிதா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் […]Read More
நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் நடித்து வந்தார். பின், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வேறு படத்தில் கவனத்தை செலுத்தியதால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தயாரிப்பாளர் புகார் அளித்திருந்தார். நடிகர் அதர்வா தயாரிப்பாளர் மதியழகன் அளித்த புகாரிலும், நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் தனுஷ், சிம்பு, அதர்வா உள்ளிட்ட மூவருக்கும் ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக […]Read More
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “கேப்டன் மில்லர்”. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படம் ரிலீஸுக்கு முன்பே மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இப்படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. Read More
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில், தனுஷ், நித்யா மேனன், ராஷிகண்ணா, ப்ரியாபவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அனிருத் இசையில் ஊருவான இப்படம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது.. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக் குவித்தது. இப்படம் வெளியாகி, நேற்றோடு ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் […]Read More
2014 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி தனுஷை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படம் தான் “வேலையில்லா பட்டதாரி”. இப்படம், தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் ரகுவரன் பி.டெக். என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில், இப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. வரும் 18 ஆம் தேதி இப்படம் தெலுங்கனாவில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம். ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படம் அங்கு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதால் “ரகுவரன் பி.டெக்.” […]Read More
நடிகர் தனுஷ் தற்போது தான் நடித்து இயக்கும் தனது 50வது படத்தின் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து தனது 51வது படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். தனுஷின் 51வது படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவிருக்கிறார். அதன் ஆரம்ப பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார். இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது. Read More