Tags : hari

News Tamil News

சமபந்தி கறி விருந்து அளித்த விஷால்!

இயக்குநர் ஹ‌ரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் விஷால்34. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் தீபாவளி தினமான நேற்றும் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்நிலையில், படப்பிடிப்பில் பணியாற்றிய அனைவருக்கும் நடிகர் விஷால் தரப்பிலிருந்து சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது. நடிகர் விஷால் படப்பிடிப்பில் எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை கடைநிலை ஊழியர் தொடங்கி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை வழக்கமாக வைத்து வருகிறார்.  Read More

News Tamil News

விஷால் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் DSP இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. தெலுங்கு சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் டி எஸ் பி, இப்படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.  Read More

News Tamil News

மீண்டும் கத்தி, அரிவாளோடு விஷால் – ஹரி

விஷால் நடிக்கும் 34வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் பூஜையும் நேற்று நடைபெற்று படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது. இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தாமிரபரணி மற்றும் பூஜை இந்த இரு படங்களில் இணைந்த விஷால் – ஹரி கூட்டணி மூன்றாவது படத்திற்காக இணைந்துள்ளது. வெளியிட்டுள்ள டைட்டில் போஸ்டரில் கத்தி, அரிவாள், துப்பாக்கி, கைவிலங்கு என ஹரி இயக்கத்திற்கான மொத்த அடையாளங்களும் […]Read More

News Tamil News

சூர்யா மீண்டும் கையில் எடுக்கும் “அருவா”

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் தான் “அருவா”. கடந்த 2020ஆம் ஆண்டு இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. அதன்பிறகு கொரோனா பெருந்தொற்றால் இந்த படம் நிறுத்தப்பட்டது. காலங்கள் கடக்க அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தார் சூர்யா. இந்நிலையில், மீண்டும் இந்த படத்தை கையில் எடுத்திருக்கிறார் சூர்யா. அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இறங்கியிருக்கிறார் சூர்யா. இபப்டத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவிருக்கிறார். தென் தமிழகத்தையே மையமாக வைத்து படம் இயக்கி […]Read More

News Tamil News

1500 ஸ்கிரீன்களில் மிகவும் பிரம்மாண்டமாக இன்று வெளியாகிறது

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் தான் “யானை”. இன்று உலகம் முழுவதும் சுமார் 1500 ஸ்கிரீன்களில் இப்படம் திரையிடப்படுகிறது. சமுத்திரக்கனி, ராதிகா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதுவரை, அருண்விஜய்யின் நடிப்பில் வெளியான படங்களில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது இந்த “யானை”. ஏற்கனவே, ஜி வி பிரகாஷ்குமார் இசையில் உருவான பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், ட்ரெய்லரும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  Read More