இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் வேட்டையன். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடிக்கவிருக்கிறது. படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். வரும் தீபாவளி தின வெளியீடாக படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. பண்டிகை விடுமுறைக்கு ரஜினி படம் வெளிவருவதால், ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். Read More
Tags : lyca
நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய், லைகா தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில், ஹீரோவாக கவின் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறார் சஞ்சய். சஞ்சய் இயக்குனராக ஆக வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர், மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனம் தான் தன் மகனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணிய சங்கீதா, தொடர்ந்து லைகா நிறுவனத்திடம் பேசி இந்த வாய்ப்பை மகனுக்காக பெற்று தந்திருந்திருக்கிறார் சங்கீதா.Read More
ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். ”தலைவர் 170” என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர்கள், நடிகைகளின் அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. திருவனந்தபுரத்தில் இதன் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது. துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகைகளும், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில், உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். […]Read More
ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது “தலைவர் 170”. படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும், இப்படத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Read More
அதர்வா அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அதர்வாவிற்கு ஜோடியாக போனிகபூரின் இரண்டாவது மகளான குஷி கபூர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் எனவும் தெரிகிறது. விக்னேஷ் சிவனின் அசோசியேட்டான ஆகாஷ் இப்படத்தை இயக்கவிருக்கிறாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.Read More
பிருத்வி ராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படன் தான் “லூசிபர்”. இப்படம் மலையாள இண்டஸ்ட்ரியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் திருப்பி போட்டது. வசூலிலும் சக்கை போடு போட்டது இந்த படம். இந்த படத்தைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இறங்கியது படக்குழு. எம்பூரான் என டைட்டில் வைத்து துவங்கப்பட்ட நிலையில், ஏனோ படம் துவங்கப்படாமல் நின்று போனது. இந்நிலையில், இப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது லைகா நிறுவனம். விரைவில் […]Read More
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன் பாகம் 2”. ஏற்கனவே பாகம் 1 மிகப்பெரும் வசூலை ஈட்டிய நிலையில், பாகம் 2-க்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கலவையான சில விமர்சனங்கள் பெற்றிருந்தாலும், அரங்கு நிறைந்த காட்சிகளாத்தான் இத்திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. […]Read More
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் துணிவு. இப்படம் மிகப்பெரும் வசூல் வேட்டை நிகழ்த்தியது. இப்படத்தோடு, விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமும் வெளிவந்தது. விஜய், தனது அடுத்தபடமான லியோ படத்தின் படப்பிடிப்பு பாதியை முடித்துவிட்டனர். ஆனால், இன்னமும் அஜித் தனது அடுத்த படத்திற்கான இயக்குனரையே தேர்வு செய்யவில்லையே என அஜித் ரசிகர்கள் மிகுந்த மன உலைச்சலில் இருக்கின்றனர். இந்நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் தினத்தினை முன்னிட்டு […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. ரஜினிகாந்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்தில் இசையமைப்பதற்காக அனிருத் சுமார் 4 கோடி ரூபாய் சம்பளமாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. தமிழ் சினிமாவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத் உருவெடுத்திருக்கிறார். Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 169வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். மிகப்பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் இருக்கிறது. இந்நிலையில், சற்று முன் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ரஜினிகாந்தின் 170 வது படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த படத்தை ஜெய்பீம் படத்தினை இயக்கிய ஞானவேல் இயக்குவார் என்றும் அனிருத் இசையமைப்பார் […]Read More