நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்கும் 50வது படத்திற்கு “மகாராஜா” என டைட்டில் வைத்துள்ளார். இப்படத்தினை, குரங்கு பொம்மை படத்தினை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், அனுராக் காஷ்யப், நட்டி (நட்ராஜ்), மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன், சரவணன் சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, கல்கி, காளையன் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர். […]Read More
Tags : new movie
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கராவோடு மீண்டும் நடிக்கவிருக்கிறார் சூர்யா என்ற செய்தி கோலிவுட்டில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. நடிகர் சூர்யா கங்குவா படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம். வாடிவாசல் படம் ஆரம்பிக்கும் முன்பு குறுகிய காலக்கட்டத்தில் எடுக்கப்படும் படமாக அது இருக்கும் என்கிறார்கள். அதற்கான பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]Read More
நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் கடைசியாக விக்ராந்த் ரோணா மிகவும் பிரம்மாண்டமான தயாரிப்பாக வெளிவந்திருந்தது. அதிகமான பொருட் செலவில் இப்படம் வெளியானது. இந்நிலையில், இவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். ஆம், கர்நாடக அரசியலில் தற்போது இருக்கும் ஆட்சிக்கு அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இவர் அடுத்ததாக சேரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சேரன் கூறிய கதை கிச்சா சுதீப்பிற்கு பிடித்து போக உடனே ஓகே சொல்லிவிட்டாராம். கர்நாடகா தேர்தல் முடிந்ததும் […]Read More
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நேர்த்தியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை சாய்பல்லவி. தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கும் சாய் பல்லவி, கதைகளைக் கேட்க நேரம் ஒதுக்க முடியாமல், தன் இமெயில் முகவரிக்கு அனுப்பச் சொல்றார். அப்படி வரும் கதைகள் அனைத்தையும் படித்து, அந்தந்த இயக்குனர்களுக்கு பதிலுரையும் கொடுக்கிறார். சில கதைகளை அவர் செய்ய முடியாத நிலையிலும்கூட, எழுதியவர்களைத் தொடர்புகொண்டு பாராட்டி, படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சிபாரிசும் செய்து வருவதை […]Read More
கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்குகியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக இப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய […]Read More
மாநாடு, வெந்து தணிந்தது காடு என ரீ எண்ட்ரீ கொடுத்த இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர் அடித்ததால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சிம்பு. இந்நிலையில், சிம்புவும் கமல்ஹாசனும் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்களாம். சிம்புவை சில படங்கள் காண்பித்து பார்க்குமாறு கூறியிருக்கிறாராம் கமல்ஹாசன். இந்நிலையில், விரைவில் தான் படம் இயக்குவதாக கமல்ஹாசனிடம் தனது விருப்பத்தை சிம்பு தெரிவிக்க, நானே தயாரிக்கிறேன் என்று மனம் மகிழ்ந்து கூறியிருக்கிறாராம் கமல்ஹாசன். வரும் பொங்கலுக்கு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]Read More
கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இந்த திரைப்படத்தை ராஜ் கமல் & ரெட் ஜெயண்ட் & மெட்ராஸ் டாக்கீஸ் என மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க மணிரத்னம் இப்படத்தை இயக்கவிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனவும் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன்-2 திரைப்படத்தை முடித்தவுடன் மணி ரத்னம் இயக்கவுள்ள […]Read More
இயக்குனர் மணிகண்டன் காக்கா முட்டை படத்தின் மூலம் சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்தவர். இப்படத்திற்காக அவர் தேசிய விருதினை பெற்றார். இப்படத்தினைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை, கடைசி விவசாயி படத்தினை இயக்கினா. இவர் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்கள் விஜய்சேதுபதியை வைத்து இயக்கியிருக்கிறார். இந்நிலையில், தனது அடுத்த படத்தையும் விஜய் சேதுபதியை வைத்து தான் இயக்கவிருக்கிறாராம்.. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதத்தில் படப்பிடிப்பு […]Read More
‘ஆதாம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த இயக்குநர் ‘ஆதாம்’ சமரின் முதல் தமிழ் படமான ‘சீன் நம்பர் 62′-ஐ நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘என் சேவல்’ சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஐயப்பனும் கோஷியும் மலையாளம் படத்தில் இடம்பெற்ற “களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு” பாடலை பாடிய, 68வது தேசிய விருது […]Read More
டோவினோ தாமஸ் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் கேரக்டர்களான மணியன், அஜயன், குஞ்சிகேலு மூன்று பாத்திரங்களில் மாறுபட்ட தோற்றங்களில் டோவினோவே நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பான்-இந்திய திரைப்படமாக பெரிய […]Read More