அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. தென்னிந்திய சினிமாவில் அதிகப்படியான வசூலை வாரிக்குவித்த படங்களில் இப்படமும் ஒன்று. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவிருக்கும் நிலையில், இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். அநேகமாக நடிக்க ஒப்புக்கொள்வார் என்கிறது கோலிவுட் வட்டாரம். Read More