பிரபல நடிகர் மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கான டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி […]Read More
Tags : RIP
அங்காடித் தெரு படத்தில் நடித்த நடிகை சிந்து காலமானார். கடந்த சில மாதங்களாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார். அங்காடி தெரு படம் மட்டுமல்லாது, பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து வந்தார். சிந்துவின் உடலானது அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை விருகம்பாக்கம் மின் மயானத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரபலங்கள் பலரும் […]Read More
ரஜினியின் முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை உட்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் சரத்பாபு. தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்திருந்தார். 71 வயதான சரத்பாபுவிற்கு கல்லீரல் மற்றும் நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த சரத்பாபு, நேற்று மாலை உயிரிழந்தார். இன்று சென்னையில் உள்ள அவரது […]Read More
இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா நேற்று மாலை காலமானார். இச்செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல நட்சத்திரங்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். பத்து தினங்களுக்கு முன் மனோபாலா நடித்து வந்த ஒரு படத்தினை ராஜவம்சம் பட இயக்குனரான கதிர்வேல் இயக்கி வந்தார். அப்போது நடந்த விஷயத்தை இயக்குனர் கதிர்வேல் தற்போது பகிர்ந்துள்ளார். அதில், மரண வேதனையிலும் படப்பிடிப்பு தளம் வந்து படுத்தபடியே “என்னால முடியலடா! மருத்துவ மனைக்கு போய் வருகிறேன்” என சொல்லி விட்டு போனவரே இப்படி […]Read More
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞனாக தமிழ் சினிமாவில் இருந்து வந்தவர் மனோபாலா. 69 வயதான இவர், தற்போது காமெடி கலைஞனாக தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வந்தார். நேற்று மாலை, உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மனோபாலாவின் மறைவை கேட்டதும் உடனே வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய். இயக்குனர் ஹச் வினோத், சரத்குமார், மதன்பாப், ரமேஷ் கண்ணா, சமுத்திரக்கனி, சிவக்குமார், மணிரத்னம், […]Read More
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக வலம் வந்தவர் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. இவர் தயாரிப்பில் ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன் ஆஞ்சநேயா, ஜி, வரலாறு உள்ளிட்ட படங்களில் அஜித் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் விக்ரமின் காதல் சடுகுடு, சிம்புவின் வாலு, ரேணிகுண்டா, 18 வயசு உள்ளிட்ட படங்களையும் இவர் தயாரித்திருந்தார். சில படங்களில் நடிகராகவும் அறியப்பட்டவர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. கடந்த 8 மாத காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று […]Read More
மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் மம்முட்டி. இவரது தாயார் பாத்திமா இஸ்மாயில் (93) இன்று காலமானார். வயது முதிர்வு நோயால் பாதிக்கப்பட்டு, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறுதிச் சடங்கு இன்று மாலை செம்ப் முஸ்லிம் ஜமியத் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்முட்டியின் தாயார் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். Read More
நடிகர் அஜித்குமார் தனது 62வது படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை அஜித்குமாரின் தந்தையான சுப்ரமணியம் இயற்கை மரணம் அடைந்தார். அஜித்தின் தந்தை பெயர் சுப்ரமணியம். சுப்ரமணியத்திற்கு மொத்தம் மூன்று மகன்கள். அவர்களில் அஜித்குமார் இரண்டாவது மகன் ஆவார். மற்ற இரண்டு மகன்கள் அனில் குமார் மற்றும் அனுப் குமார். சுப்ரமணியம் அஜித்தின் பெசண்ட் நகர் வீட்டில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாகவும், பக்கவாத நோயாலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு முழு […]Read More
பிரபல திரைப்பட இயகுனரும் நடிகருமான டி பி கஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 72. லக்கி ஸ்டார்’, ‘வீடு, மனைவி, மக்கள்’, ‘எங்க ஊரு காவக்காரன்’, ‘பாண்டி நாட்டுத் தங்கம்’, ‘எங்க ஊரு மாப்பிள்ளை’, ‘தாயா தாரமா’, ‘நல்ல காலம் பொறந்தாச்சு’, ‘பெண்கள் வீட்டின் கண்கள்’, ‘கொஞ்சும் கிளி’, ‘பாட்டு வாத்தியார்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘சீனா தானா’, ‘மகனே மருமகனே உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் […]Read More
பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் 10,000-க்கு அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார், இந்தாண்டு குடியரசு தினத்தன்று ஒன்றிய அரசின் பத்மபூஷன் விருது வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்டது. படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]Read More