விரைவில் “தனி ஒருவன் 2”

 விரைவில் “தனி ஒருவன் 2”

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் கடந்த 2015ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் தனி ஒருவன்.

இப்படம் வெளியாகி மிகப்பெரும் அளவிற்கு வெற்றிப் பெற்றது. படத்தின் கதை, திரைக்கதை என படத்திற்கு பலமான பல இப்படத்தில் இருந்தது.

இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் எப்போது எனபலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு சில வருடங்களுக்கு முன் வெளியானது.

ஆனால், அது அறிவிப்பாகவே நின்று போனது. ஜெயம் ரவி ஒரு படத்திலும் மோகன் ராஜா வேறு ஒரு படத்திலும் பிஸியாக இருந்து வந்தனர்..

இந்நிலையில், மீண்டும் தனி ஒருவன் 2 ஆரம்பமாகும் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். அதற்கான ஆரம்ப பணிகள் முடிவு பெற்றுவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post