மாதவனை இயக்கும் திருச்சிற்றம்பலம் பட இயக்குனர்!

ராக்கெட்ரி படத்திற்குப் பிறகு அடுத்த படத்தில் இன்னும் கமிட் ஆகாமல் இருந்த மாதவன், தமிழில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தினை பார்த்திருக்கிறார்.
படம் மிகவும் பிடித்து போக, இயக்குனர் மித்ரன் ஜவஹரை நேரில் அழைத்திருக்கிறார். தனக்கு ஒரு கதை ரெடி பண்ண சொல்ல, உடனே ஒரு கதையை மித்ரன் கூற, உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
மாதவனின் அடுத்த படம் பாலிவுட்டில் தான் இருக்கும் என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், மித்ரனுக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட்.
இவர்கள் இணையும் படத்தின் அப்டேட் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.