யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம் இருக்கும் – இயக்குனர் மித்ரன் ஜவஹர்!

 யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம் இருக்கும் – இயக்குனர் மித்ரன் ஜவஹர்!

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இன்று உலகம் முழுவதும் வெளிவரும் திரைப்படம் தான் “திருச்சிற்றமபலம்”.

இந்த படத்தில் ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.

படத்தினைக் குறித்து இயக்குனர் மித்ரன் ஜவஹர் பேசும்போது, “ ‘கர்ணன்’ ஷூட்டிங் போது, தனுஷ் சார்கிட்ட இந்தக் கதையை சொன்னேன். நாங்க பேசிப்பேசி முழுக்கதையா ரெடி செய்தோம்.

நான் செல்வராகவன் சார்கிட்ட ஒர்க் பண்ணப்ப இருந்து தனுஷைத் தெரியும். ஆனாலும் நான் அவருக்காகன்னு ஒரு கதை சொன்னதே இல்ல. அவரும் என்கிட்ட ‘எனக்காக ஒரு கதை’ன்னு கேட்டதில்லை. இதுவரை பண்ணின படங்கள் அத்தனையுமே தானாகவே அமைந்ததுதான்.

என்னோட படங்கள் எல்லாமே குடும்பத்தோடு பார்க்கக்கூடியவையா இருக்கும். ‘யாரடி நீ மோகினி’ படம் தனுஷ் சாருக்கு ஃபேமிலி ஆடியன்ஸைக் கொடுத்துச்சு. இப்ப, ‘திருச்சிற்றம்பலம்’ மீண்டும் அப்படியொரு படமா வந்திருக்கு.” என்று கூறியுள்ளார்.

 

Related post