வாத்தி’க்காக தயாராகும் பிரம்மாண்ட மேடை!

 வாத்தி’க்காக தயாராகும் பிரம்மாண்ட மேடை!

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிகக் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் வாத்தி.

இப்படத்தினை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

வரும் 17-ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துவிட்ட நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா 4 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

சென்னை சாய்ராம் கல்லூரியில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் பிரம்மாண்டமான மேடையினை அமைத்து வருகின்றனர்.

கோலிவுட் நட்சத்திரங்கள் சிலரும், ரசிகர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post