மூன்று நாட்களில் 51 கோடி… வாரி எடுத்த வாத்தி
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் வாத்தி.
நல்ல கதை என்பதால் படத்திற்கு பெரிய ரிசல்ட் கிடைக்கவில்லை என்றாலும், போதுமான வரவேற்பு கிடைத்தது.
தனுஷ் நடிப்பில் வெளியான முதல் தெலுங்கு திரைப்படமும் இதுவே. ஆகவே, தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது.
இந்நிலையில், வாத்தி படத்தின் தயாரிப்பு தரப்பு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று தினங்களில் மட்டும் இதுவரை சுமார் ரூபாய் 51 கோடி வசூலை வாரிக் குவித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிதாக கொண்டாடி வருகின்றனர்.