தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் வடிவேலு…!

 தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் வடிவேலு…!

பல வருடங்களுக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார் வைகைப்புயல் வடிவேலு.

இப்படம் யாரும் எதிர்பாரா வண்ணம் மிகப்பெரும் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை சற்றும் எதிர்பாராத வடிவேலும் மிகவும் மனம் உடைந்தார்.

தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். மாமன்னன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பு மட்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பிற்கு வடிவேலு சரிவர வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காலை பத்து மணிக்கு வர சொன்னால், காலம் தாழ்த்தி, வருகிறேன் வருகிறேன் என்று கூறி அதன் பிறகு படப்பிடிப்பிற்கு வரவே மாட்டாராம். இதனால் கடுப்பான படக்குழு, வடிவேலு ஏற்கனவே நடித்த பல காட்சிகளை படத்தில் இருந்து தூக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

தமிழ் சினிமாவிற்குள் மீண்டும் நுழைய ஒரு வெற்றி தேவை என்ற நோக்கில் இருக்கும் வடிவேலுக்கு, எதற்கு இந்த ஆணவம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

தன் தலையிலேயே தானே மண்ணை வாரி போட்டுக் கொள்கிறார் வடிவேலு என்று கூறுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.

 

Related post