அவமானம் மற்றும் தோல்வி நிறைய கற்றுக் கொடுக்கிறது – விக்னேஷ் சிவன்!

 அவமானம் மற்றும் தோல்வி நிறைய கற்றுக் கொடுக்கிறது – விக்னேஷ் சிவன்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளிவந்தது.

இப்படத்தினைத் தொடர்ந்து அஜித்தை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாகவும் இயக்குனர் மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தனது மகனை கையில் ஏந்தியவாறு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில், “என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும், வெற்றியும் நமக்கு கற்பிப்பதை விட அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக் கொடுக்கிறது.” என்று கூறியுள்ளார்.

 

Related post