லியோவை சீக்கிரமா முடிச்சிடுப்பா.. விஜய் வைத்த கோரிக்கை

 லியோவை சீக்கிரமா முடிச்சிடுப்பா.. விஜய் வைத்த கோரிக்கை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது “லியோ”. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மூணாறில் நடைபெற்றது.

அதன் தொடர்ட்ச்சியாக மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சுமார் 2 மாதங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டம் தீட்டியுள்ளனர்.

இதற்காக படத்தில் நடிக்ககூடிய நடிகர், நடிகைகள் அங்கு முகாமிட்டுள்ளனர். தற்போது காஷ்மீரில் அதிகப்படியான பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதனால், படத்தின் படப்பிடிப்பை சீக்கிரமாக முடிக்கும்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு அன்பு கட்டளை பிறப்பித்திருக்கிறாராம்.

அதற்காக அங்குள்ள குழுவினர் இரவும் பகலுமாக வேலை பார்த்து வருகிறார்களாம்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page