அதிக சம்பளம் கேட்ட விஜய் சேதுபதி.. கழட்டி விட்ட தயாரிப்பாளர்!

 அதிக சம்பளம் கேட்ட விஜய் சேதுபதி.. கழட்டி விட்ட தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் அசைக்க முடியா நடிகராக உருவெடுத்து நிற்கும் விஜய் சேதுபதி, கைவசம் பல படங்களை வைத்திருக்கிறாராம்.

இந்நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கிறது அரண்மனை 4. இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறது தயாரிப்பு தரப்பு, தாராளமாக நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறி அதற்கு அதிக சம்பளம் வேண்டும் என்று தயாரிப்பு தரப்பிடம் திட்டவட்டமாக கூறிவிட்டாராம் விஜய் சேதுபதி.

இதனால், டென்ஷனான தயாரிப்பு தரப்பினர் விஜய் சேதுபதியை கழட்டி விட்டு.. நாம் எதற்கு வெளியே தேட வேண்டும் சுந்தர் சி’யை இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்துவிடுவோம் என்று முடிவெடுத்து விட்டார்களாம்.

3 மாதத்திற்குள் படத்தினை எடுத்து முடிக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post